ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை : நடிகர் சங்க தேர்தல் தேதியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, கோர்ட்டில், பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல், ஜூலை மாதம் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், சரத்குமார் தலைமையிலான அணிக்கும், விஷால் தலைமையிலான அணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
ஜூலை 15ம் தேதி, வார வேலைநாளான புதன்கிழமையாக உள்ளதால், தேர்தலை, அவ்வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று விஷால், நாசர், கார்த்தி தரப்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், தேர்தலை, வக்கீல்கள் கண்காணிப்பதற்கு பதிலாக, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனு தொடர்பாக, இருவார காலஅளவிற்குள் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ராதாரவி, சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சங்கத்தில் உள்ள 3 ஆயிரம் உறுப்பினர்கள் முன்னிலையில் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுத்து, இந்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. யாரோ மூவர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக, தேதியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.