ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சரத்குமார் தற்போது சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் என பல பதவிகளில் உள்ளார். படம் நடிப்பதையும் கணிசமாக குறைத்துக் கொண்டார் கடைசியாக தனது சொந்த தயாரிப்பில் சண்டமாருதம் படத்தில் நடித்தார். அடுத்து அவர் மிஷ்கின் இயக்கதில் ஒரு படம். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ஏய் இரண்டாம் பாகம், செல்வராஜ் இயக்கத்தில் விடியல் படங்களில் நடிப்பது அவரது அடுத்த திட்டமாக உள்ளது.
இந்த நிலையில் விரைவில் நான் நடிப்புக்கு முழுக்கு போடலாம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் சரத்குமார் மதுரைக்கு சென்றார். அங்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
"கட்சியை வளர்க்கவும், மக்கள் பணியை தீவிரப்படுத்தவும் சில முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறேன். நடிப்பதை கைவிடலாமா? நடிக்காவிட்டால் வருமானத்துக்கு என்ன செய்வது. படம் தயாரிக்கலாமா? அல்லது வேறு தொழில் செய்யலாமா என்று யோசித்து வருகிறேன். இன்னும் இரண்டு மாதங்களில் முக்கிய முடிவு எடுப்பேன்" என்று கூறியிருக்கிறார்.