மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அழகான, அட்டகாசமான பல திறமையான நடிகைகளை தந்த பஞ்சாபிலிருந்து மேலும் ஒரு அழகி தமிழில் அறிமுகம் ஆகிறார். 'வருடு' என்ற தெலுங்கு படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த பானுஸ்ரீ, தமிழில் தனது முதல் படத்தில் பரத் உடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.
தனது சினிமா பிரவேசத்தை பற்றி பானுஸ்ரீ மெஹ்ரா கூறும்பொழுது “ தெஹ்ராதூணில் மேல்நிலை கல்வியை முடித்து மும்பையில் மாஸ் மீடியா பட்டபடிப்பு மேற்கொண்டு வந்த நேரத்தில் மாடலிங் ஆரம்பித்தேன். பின் பல விளம்பரங்களில் நடித்தேன். இதன்மூலகமாவே ' வருடு' படத்தில் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திற்கு பின் எனது தாய் மொழியான பஞ்சாபியில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறேன். தற்பொழுது தமிழில் அறிமுகமாவது மகிழ்ச்சியாகவுள்ளது. இப்படத்தில் நான் ஒரு செய்தி வாசிப்பாளராக, மிகவும் தைரியாமான பெண்ணாக வருகிறேன். விரைவில் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. பிரபல பெண் பத்திரிக்கையாளர் பர்க்கா தத்தை எனது ரோல் மாடலாக எடுத்து நடிக்கிறேன். இன்றைய பத்திரிகைத் துறையில் வேலை செய்யும் அனைத்து மகளிருக்கும் எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்கிறார் பானுஸ்ரீ மெஹ்ரா.