ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இனிது இனிது படத்தின் மூலம் அறிமுகமானவர் நாராயண். பயணம், சி.எஸ்.கே. திறந்திடு தீசே படங்களில் நடித்தார், தற்போது பூலோகம் படங்களில் நடித்துள்ளார். அடுத்து நாராயண் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான அருகில் ஓராள் என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதனை பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் கலைவாணன் இயக்குகிறார். மலையாளப் படத்தில் நிவின் பாலி, இந்திரஜித் ஹீரோவாக நடித்திருந்தார்கள். தமிழ் ரீமேக்கில் இந்திரஜித் நடித்த கேரக்டரில் நாராயண் நடிக்கிறார்.
"நிறைய படங்களில் நடித்திருந்தாலும் எல்லா மக்களிடமும் சென்று சேர்கிற மாதிரி படம் அமையவில்லை. திறந்திடு தீசே படத்தில் என்னுடைய நடிப்பு பேசப்பட்டது. உப்புக்கருவாடு படத்தில் சினிமா துணை இயக்குனராக நடித்திருக்கிறேன். அருகில் ஓராள் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறேன். இந்தப் படம் எனக்கு நல்ல திருப்பத்தை தரும் என்று நம்புகிறேன்" என்கிறார் நாராயணன்.