ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வருடத்திற்கு நான்கு படங்கள் என்கிற சீரான வேகத்தில் தான் போய்க்கொண்டிருக்கிறார் தெற்றுப்பல் அழகியான சுப்ரமணியபுரம் ஸ்வாதி. கடந்த வருடம் தமிழில் இவர் நடித்த 'வடகறி'க்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லையென்றாலும் கூட மலையாளத்தில் சன்னி வெய்ன், ஆசிப் அலியுடன் இணைந்து நடித்த மொசையிலே குதிர மீனுகள்' படம் ஸ்வாதிக்கு நல்ல பெயரை வாங்கித்தந்து. ஆனால் இந்தவருட ஆரம்பத்திலேயே இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'ஆடு' படத்திற்கும் நோ ரெஸ்பான்ஸ்.. இப்படி, சாண் ஏறினால் முழம் சறுக்குவதுபோலத்தான் ஸ்வாதியின் நிலைமை இருக்கிறது..
ஆனால் இந்தவருடம் தனக்கு சுபிட்சமாக இருக்கும் என உறுதியாக நம்புகிறார் ஸ்வாதி. காரணம் தற்போது தமிழிலும் மலையாளத்திலும் இருமொழிப்படமாக உருவாகிவரும் 'டபுள் பேரல்' மற்றும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துவரும் 'யட்சன்' ஆகிய இரண்டு படங்களும் இரண்டு மொழிகளிலும் நிச்சயம் ஸ்வாதிக்கு கைகொடுக்குமாம். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களிலும் ஆர்யா நடித்திருக்கிறார். இந்த இரண்டு ஷூட்டிங்குகளிலும் மாறிமாறி ஆர்யாவுடன் நடித்து புதுமையான அனுபவம் என்கிறார் ஸ்வாதி.