ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை சினேகாவுக்கு தனியார் ஹோட்டல் ஒன்றில், சிறப்பான முறையில் வளைகாப்பு நடந்தது. விரும்புகிறேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சினேகா. தனது நடிப்பாலும், அழகான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த சினேகா, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னாவை காதலிக்க தொடங்கிய சினேகா, 2012ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்த சினேகா அதன்பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சினேகா கர்ப்பமானார். இதை பிரசன்னாவும் தன் டுவிட்டர் பக்கத்தில், தங்களது வீட்டிற்கு புதிதாக இன்னொருவர் வர இருக்கிறார் என்று சூசகமாக தெரிவித்தார். சினேகாவும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். சினேகா தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். பொதுவாக கர்ப்பமான பெண்களுக்கு 7 அல்லது 9வது மாதங்களில் வளைகாப்பு நடத்துவார்கள் அதன்படி சினேகாவுக்கு தற்போது 7வது மாதம் என்பதால் இன்று(ஜூன் 18ம் தேதி) சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சிறப்பான முறையில் வளைகாப்பு நடந்துள்ளது. இந்த வளைகாப்பில் சினேகா - பிரசன்னாவின் குடும்பத்தாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதுப்பற்றி நடிகர் பிரசன்னா நம்மிடம் பேசியதாவது, நான் தற்போது நாகராஜன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடந்து வருகிறது. திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட வளைகாப்பு இது. இதனால் அதிகளவில் யாரையும் அழைக்கவில்லை. வளைகாப்பு முடித்தவுடன் சினேகா அவரது வீட்டுக்கு செல்கிறார் என்றார்.