ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளிவந்து சிறந்த தமிழ்ப் படத்திற்காகவும், சிறந்த ஒப்பனைக்காகவும் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றப் படம் வழக்கு எண் 18/9. இந்தப் படத்தில் நடிப்பதற்காக இன்றைய முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு கேட்ட சம்பவத்தை நேற்று நடைபெற்ற ரஜினி முருகன் டிசர் விழாவில் லிங்குசாமி குறிப்பிட்டுப் பேசினார்.
“வழக்கு எண் படம் ஆரம்பிச்ச டயம், சிவகார்த்திகேயன் எனக்கு போன் பண்ணி பேசினாரு. சார், பாலாஜி சக்திவேல் சாரைப் பார்க்கணும், நீங்க கொஞ்சம் சொல்றீங்களான்னு கேட்டாரு. நானும், சரி சிவா, இப்ப ஹீரோ செலக்ஷன்தான் போயிட்டிருக்கு, போய்ப் பாருங்கன்னு சொன்னேன்.
நீங்க வேற, காமெடி பண்ணாதீங்க சார், சின்னதா ஏதாவது ஒரு கேரக்டர் இருக்குமான்னு கேக்கதான் சார்னு சொன்னாரு. அதுக்கு நான், ஏன் ஹீரேவா கொடுத்தால் பண்ண மாட்டீங்களான்னு கேட்டேன். பார்த்தால், இன்னைக்கு நினைச்சே பார்க்க முடியலை. பாலாஜி சக்திவேல் அடுத்த படம் கூட இன்னும் வரலை, சிவாவோட வளர்ச்சி அப்படி ஒரு வளர்ச்சியில் இருக்கு,” என மனம் திறந்து லிங்குசாமி பாராட்டினார்.
அன்று லிங்குசாமி தயாரிப்பில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட சிவா, இன்று லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனத்தையே தாங்கிப் பிடிக்கக் கூடிய 'ரஜினி முருகன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.