ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தங்களது அபிமான ஹீரோக்கள் படங்களில் சொல்லும் நல்ல விஷயங்களை ரசிகர்கள் மட்டும் தான் பின்பற்றவேண்டும் என்பதில்லை.. சம்பந்தப்பட்ட நடிகர்களும் கூட பின்பற்றலாமே.. அதற்கு ஒரு முன்னுதாரணமாகத்தான் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.. அந்தவகையில் கோழிக்கோடு நகரத்தில் பசியால் வாடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். கோழிக்கோடு நகரத்தை பசியில்லாதவர்களின் நகரமாக்கவேண்டும் என்கிற எண்ணம் தான் இதற்கு காரணம்.
இந்த திட்டத்திற்கு ஆபரேஷன் சுலைமானி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் துல்கருக்கு உதவியாக களத்தில் இறங்க கோழிக்கோடு மாவட்ட நிர்வாகமும் ஹோட்டல் உரிமையாளர் சங்கமும் கைகோர்த்திருக்கின்றன. கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் இந்த திட்டத்தை துவங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை துவங்குவதற்கு தூண்டுதலாக அமைந்தது துல்கர் நடித்த இரண்டாவது படமான 'உஸ்தாத் ஹோட்டல்' தான்.
அந்தப்படத்தில் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் பற்றிய படிப்பை படித்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று தலைசிறந்த 'செஃப்' ஆக வேண்டுமென்று விரும்புவார் துல்கர். ஆனால் கேரளாவில் 'உஸ்தாத் ஹோட்டல்' என்கிற பெயரில் ஹோட்டல் நடத்திவரும் அவரது தாத்தாவான திலகன், ஒரு உண்மையான சமையற்காரனின் பணி என்பது ஏழைகளின் பசியை போக்குவது தான் என்பதை அவருக்கு உணர்த்துவார். இதுதான் துல்கருக்கு இப்படி ஒரு திட்டத்தை ஆரம்பிக்கவேண்டும் எண்ணத்தை தோற்றுவித்தது. ஹேட்ஸ் ஆப் துல்கர்..!