சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சமுத்திரக்கனிக்கு பல முகங்கள் உண்டு. திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர், பின்னணிக்குரல் கொடுப்பவர், சீரியல் இயக்குநர் என்று அவருக்கு பல முகங்கள் உண்டு. பாட்டு கூட பாடியிருக்கிறார் பாடகரும் கூட. இன்னொரு முகமும் அவருக்குண்டு. சிறந்த மோட்டிவேட்டர். அதாவது உற்சாகப்படுத்துபவர்.துவண்டு கிடப்பவரையும் பேசிஉற்சாகத்தில் தூக்கி நிறுத்தி விடுவார்.தோல்வியில் துவள்வோருக்கு தன் வாழ்க்கைக் கதையையே கூறி ஊக்கம் தருவாராம். இத்தனை விதங்களிலும் இறங்கிச் செயல்படும் சமுத்திரக்கனி எப்போது நடிப்பார், எப்போது இயக்குவார் என்று சொல்லிவிட முடியாது. தமிழ் தெலுங்கு மொழிகளில் இயக்குகிறார். தமிழ் ,தெலுங்கு,கன்னட மலையாளமொழிகளில் நடிக்கிறார். காலம்போன போக்கில் பயணப்படுகிறார். அவர் தன்னை நடிக்க அழைப்பவர்களிடம் தனது தேவை எந்தளவுக்கு என்று உணர்ந்தபின்புதான் நடிக்கிறார் இதில் பெரியபடம் , சிறிய படம் என்கிற பேதம் பார்ப்பதில்லை. தன்னை ஒரு பலமாக நினைத்து வரும் வாய்ப்புகளில் நடிப்பதுடன் தன்னாலான உதவிகளையும் செய்து ஊக்கம் தருகிறார். படத்தின்நோக்கம் நன்றாக இருந்தாலும் நடிக்கிறார். புத்தனின் சிரிப்பு லஞ்ச ஊழலுக்கு எதிரான படம் என்பதால் நடித்தார். சசிகுமாருடன் இணைந்து நடித்த படங்கள், சாட்டை, வேலையில்லா பட்டதாரி போன்றவை நடிப்பில் இவருக்கு கை கொடுத்தன. பிறகு வந்த காடு, மாஸ், படங்களில் நடிக்கவும் இவர் ஒவ்வொரு காரணம் வைத்திருப்பார். இப்போது அதிபர், விசாரணை., கொளஞ்சி, காவல், ரஜினி முருகன், பாயும்புலி ,திரு இயக்கும் புதிய படம் என்று பாசிடிவ், நெகடிவ் என்று நடிப்பவை எல்லாம் நட்பின் அடையாளமாக ஒப்புக் கொண்டவைதான். என்றும் நண்பர்களை மதித்து ஆற்றுப் படுத்தி வழிகாட்டத் தவறுவதில்லையாம். அந்த வகையில் சமுத்திரக்கனியின் மனசும் கனிதான்....