ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில், தற்போது அனைத்து ஹீரோக்களின் பார்வையும் கீர்த்தி சுரேஷ் மீதுதான் இருக்கிறது. தமிழில் நடித்த ஒரு படம் கூட இன்னும் வரவில்லை. அதற்குள் ரஜினி முருகன், இது என்ன மாயம், பாம்பு சட்டை ஆகிய படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர், அடுத்து தனுஷ் ஜோடியாக பிரபு சாலமன் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அதற்கடுத்து பாண்டிராஜ், விஷாலை வைத்து இயக்கப் போகும் படத்திலும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷிடம் பேசி வருகிறார்களாம். இத்தனை படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷைப் பார்த்து மற்ற நடிகைகளே பொறாமைப்பட்டுத்தான் இருக்கிறார்களாம்.
இந்நிலையில் ரஜினி முருகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ், நமக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது, இன்னும் நான் நடித்த படங்கள் ஒன்று கூட ரிலீஸாகவில்லை, ஆனால் இவ்வளவு படம் எப்படி கமிட்டானேன் என்றே தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் கடவுள் தான் காரணம். நான் நிறைய சம்பளம் கேட்பதாக செய்திகள் வந்தது. ஆனால் நான் இன்னும் 40 லட்சத்தை கூட தாண்டவில்லை. என் மீது தவறான அபிப்ராயம் உருவாகியுள்ளது என்று கூறினார்.