ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி, தெகிடி, எனக்குள் ஒருவன் போன்ற படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். தற்போது இன்று நேற்று நாளை, மாயவன், இறைவி, எஸ்கிமோ காதல் உள்பட பல படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் இன்று நேற்று நாளை படத்தைப்பற்றி அவர் கூறுகையில், சூதுகவ்வும் படத்தை தயாரித்தபோது, முண்டாசுப்பட்டி டைரக்டர் ராம்தான் ரவிக்குமாரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது இன்று நேற்று நாளை படத்தின் கதையை என்னிடம் சொன்னார் ரவிக்குமார். அதன்பிறகு கதையை விவாதம் செய்து ஸ்கிரிப்ட் எழுதத் தொடங்கினார். அந்த வகையில், கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவர் இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டை எழுதி வந்தார். மேலும், எனது எல்லா படங்களின் படப்பிடிப்பு தளங்களுக்கும் நான் அவ்வப்போது செல்வேன். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு ஒருநாள்கூட சென்றதில்லை. அந்த அளவுக்கு இந்த படத்தில் பணியாற்றியவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதோடு, இந்த படம் ஹாலிவுட் படம் போன்று இருந்தாலும் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதை நம்ம ஊர் ரசிகர்களுக்கு புரியும்படி எளிமையாக அமைந்துள்ளது. டைம் மிஷின் சம்பந்தப்பட்ட கதை என்பதால் சிஜி ஒர்க்கே 7 மாதங்கள் நடந்துள்ளது என்று கூறும் தயாரிப்பாளர் சி.வி.குமார், என் கேரியரில் இந்த படத்தை நான் ஒரு முக்கியமான படமாக கருதுகிறேன் என்கிறார்.