ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் மணிரத்னத்தின் படைப்பாற்றலை, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான அருங்காட்சியகம், கவுரவிக்க முடிவு செய்துள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பிரசித்தி பெற்ற என்.ஒய்.சி., என்ற அருங்காட்சியகம் உள்ளது. உலகின் தலைசிறந்த திரைப்பட கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களை, இந்த அருங்காட்சிய நிர்வாகம் கவரவித்து வருகிறது.பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை கவுரவிக்கும் வகையில், அவரைப் பற்றிய ஆவணப்படம், சமீபத்தில் இங்கு திரையிடப்பட்டது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில், பல படங்களை இயக்கியுள்ள மணிரத்னத்தை கவுரவிக்க, இந்த அருங்காட்சியக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.அடுத்த மாதம், 31ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கவுள்ள நிகழ்ச்சியில், மணிரத்னத்தை கவுரவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.அவர் இயக்கிய, ரோஜா, பாம்பே, தில்சே ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.இதுகுறித்து, அருங்காட்சியக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிரத்னம், மிகச்சிறந்த படைப்பாற்றல் உடையவர்; அவருக்கான இந்த கவுரவம், காலம் தாழ்த்தி நிகழ்வதாகவே கருதுகிறோம்; அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்னைகளை, சுவராசியமாக படமாக்க கூடியவர் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.