ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் லீயின் மறைவு, சர்வேதேச திரையுலகின் மாபெரும் இழப்பு என்று பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அமிதாப் பச்சன், தனது வலைப்பூவில் (Blog) குறிப்பிட்டுள்ளதாவது, தென் ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் அழகிப்போட்டிக்காக அழகிகளை தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் குழுவில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது அந்த குழுவில், கிறிஸ்டோபர் லீயும் இடம்பெற்றிருந்தார். முதன்முறையாக அவரை பார்த்தபோதிலும், அவர் ஏதோ நீண்ட நாட்கள் பழகியதைப்போன்று மிகவும் நட்புடன் பழகினார். அப்போது அவருடன் இணைந்து கோல்ப் விளையாடினேன். கிறிஸ்டோபர் லீ சிறந்த மனிதர், அனைவருடனும் எளிதில் பழகக்கூடியவர்.
லார்ட்ஸ் ஆப் தி ரிங்ஸ் படத்தின் மூலம் பெரும்புகழ் பெற்றிருந்த கிறிஸ்டோபர் லீ, ஜின்னாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தின் சூட்டிங்கிற்காக, இந்தியா வந்திருந்தபோதும், அவரை நான் சந்திக்க நான் தவறிவிட்டேன். அதை தற்போது நினைத்தால் கூட மிகவும் வருத்தமாக உள்ளது.