ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்குத் திரையுலகில் 70களில் அறிமுகமாகி 80களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஜெயப்பிரதா. தமிழில் “மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள், ஏழை ஜாதி” ஆகிய சில குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்தார். பின்னர் தெலுங்கில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார். அதே காலகட்டத்தில் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்து அங்கும் புகழ் பெற்றார். சுமார் 14 வருடங்கள் கழித்து தமிழில் 'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார்.
அரசியலிலும் ஈடுபட்டு எம்.பி.யாகவும் இருந்த ஜெயப்பிரதா கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினர். தற்போது தீவிர அரசியலில் ஈடுபடாமல் குறைத்துக் கொண்டார். அதே சமயம் தற்போது தெலுங்குப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். அம்மா கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயார் என அவர் சொல்லியிருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மட்டுமல்லாது, கன்னடம், மலையாளம், பெங்காலிப் படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார்.
தெலுங்கில் நடித்து தமிழில் டப்பிங் ஆன 'சலங்கை ஒலி' படம் ஜெயப்பிரதாவைப் பற்றி ரசிகர்களுக்கு நன்றாகவே ஞாபகப்படுத்தும் படமாக இருக்கும். மீண்டும் தமிழிலும் ஜெயப்பிரதா நடிக்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போது தமன் மகன் சித்து நாயகனாக நடிக்கும் 'உயிரே உயிரே' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.