Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காக்கா முட்டை என் மகனின் கதைதான்: இயக்குநர் மணிகண்டன்

10 ஜூன், 2015 - 04:33 IST
எழுத்தின் அளவு:
Kakka-Muttai-is-my-sons-story-says-Director-Manikandan
Advertisement

மணிகண்டன் இயக்கத்தில், தேசியவிருதுகள் பெற்ற படம் காக்கா முட்டை. இப்படம் இதுவரை 9 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றுள்ளது. இவ்வளவு புகழ் பெற்ற ஒரு படத்தின் கதை மிகவும் எளிமையானது. பீட்ஸா மீது ஆசைப்படும் சிறுவர்கள் இருவர் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின் கிடைத்த பீட்ஸாவை சாப்பிட்ட போது ருசிக்கவில்லை. இந்தக்கதை கருவை எங்கிருந்து பெற்றீர்கள் என்று இயக்குநர் மணிகண்டனைக் கேட்டால், தன் மகனிடமிருந்துதான் என்கிறார். எப்படி என்ற போது...


"என் மகன் பெயர் எழிலன், இப்போது அவனுக்கு 9 வயது ஆகிறது. அவனுக்கு அப்போது ஆறுவயது இருக்கும். பீட்ஸா வேண்டும் என்று பல நாள் நச்சரித்து வந்தான். அதன் தோற்றத்தில் கலரில் அவனுக்கு அவ்வளவு மோகம். வாங்கித் தந்த போது ஒரு வாய் கடித்து சாப்பிட்டான் உதட்டைப் பிதுக்கி மேலும் சாப்பிட முடியாமல் சாப்பிடப் பிடிக்காமல் விழி பிதுங்கினான். அவனுக்குப் பிடிக்கவில்லை. எனக்கு கோபம் கோபமாக வந்தது. இப்படி விளம்பர மோகத்தில் தான் சிறுவர்கள் தூண்டப்பட்டு பொருள்களை வாங்குகிறார்கள். அதை விளம்பரப்படுத்தும்போது சிறுவர்களைக் கவரும்படி உளவியல் ரீதியாக தூண்டும்படி பெரிய கூட்டத்தினரே திட்டமிட்டு விளம்பரங்களை வடிவமைக்கிறார்கள். இந்த உருப்படாத கதைக்குதவாத பொருள்களை தின்னும் போது விளம்பரத்தில் நடிப்பவர்களின் நடிப்பு இருக்கிறதே அது உலகமகா நடிப்புடா சாமி. ஏதோ தெய்வீக இனிப்பாக ருசியான பொருள்களை தின்பது போல அப்படி ஒரு முகபாவனை காட்டுவார்கள்.


இப்படித்தான் சிறுவர், பெண்கள் பயன்படுத்தும் பொருள்களை விளம்பரத்தில் கவர்ந்து வியாபாரம் செய்கிறார்கள். இந்த விளம்பர அரசியலை பற்றிச் சிந்தித்த போதுதான் இந்தக் கதை உருவானது. " என்கிறார்.


படப்பிடிப்பு அனுபவம் பற்றிக் கேட்ட போது, இது வெறும் 61 நாட்களில் முடிக்கப்பட்ட படம். நானே ஒளிப்பதிவாளராக வேலை செய்ததால் கேமராவைத்தோளில் சுமந்து தோள்பட்டை வலி பயங்கரமாக வந்து விட்டது. விருதுகள் வந்த பின் வலிகள் சுவடே தெரியவில்லை. இப்போதும் தொடரும் பாராட்டுகளும் விருதுகளும் எல்லா வலிகளையும் போக்கிவிட்டன.


இந்தப் படத்தின் வெற்றி பலருக்கும் நல்லவித புதுமுயற்சிகளுக்கு துணிவைக் கொடுத்து இருக்கிறது. இதை மக்கள் ரசிப்பார்களா ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கத்துடன் தங்களது அருமையான படைப்புகளை கடைசிவரை எடுக்க முடியாமல் போன படைப்பாளிகளை நினைத்து வருத்தப்படுகிறேன். ரசிகர்கள் புத்திசாலிகள்தான்


நாம்தான் நம்மையே ஏமாற்றிக் கொண்டும், ரசிகர்களையும் ஏமாற்றிக் கொண்டும் இருந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. என்கிற இந்த உசிலம்பட்டிக்காரர் தன் அடுத்த படமான குற்றமே தண்டனை யை சைக்கிள் கேப்பில் எடுத்து முடித்து விட்டார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in