மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சந்தானம் நடித்துள்ள இனிமே இப்படித்தான் படத்தை இயக்கும் முருகானந்த் என்கிற இருவரில் முருகன் சந்தானத்தின் சிறுவயது காலத்திலிருந்து நண்பராக இருப்பவர். இருவரும் எதிரெதிர் வீடுகளில் வளர்ந்தவர்கள். ஒரே பள்ளி ஒரே கல்லூரி என்று படித்தவர்கள். சந்தானம் எப்படி படிப்பார் என்ற போது சந்தானம் பற்றிய பால்யகால நினைவுகளில் முருகன் நுழைந்தார்.
"நாங்கள் இருவரும் வாடா போடா நண்பர்கள். எங்கள் வீட்டு எதிரேயே நாங்கள் படித்த பள்ளிக்கூடம் இருந்தது. நாங்கள் படிக்காமல் வெளியே முட்டி போட்டு பனிஷ்மெண்டில் நிற்போம். மிஸ் ஒருபக்கம் அடிப்பார்கள். இதை எதிர் வீட்டில் இருந்து கொண்டு பார்க்கும் எங்கள் அப்பாவும், அவரது அப்பாவும் வீட்டை விட்டு வெளியே வந்தால் பார்த்து விடுவார்கள். நேரே வந்து எங்களை அடிப்பார்கள். ஸ்கூலில் ஒருபக்கம் அடி. அப்பாக்கள் மறுபக்கம் அடிப்பார்கள். ஏன்தான் வீட்டுக்கு பக்கத்திலேயே அதுவும் உள்ளே நடக்கிறது வெளியே பார்க்கும்படி ஸ்கூல் இருக்கிறதோ என்று நொந்து போவோம். இப்போது அந்த ஸ்கூலைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் வந்து விட்டது. இப்போது பார்த்தால் நாங்கள் பேசிக் கொள்வோம். இப்போதுள்ள பசங்க கொடுத்து வச்ச தப்பிச்சாங்கன்னு பேசுவோம்." என்றவர், சந்தானத்தின் படிப்பு பற்றி பேசும்போது வெளியில முட்டிபோட்டு நின்னு அடி வாங்கி இருக்கோம்னா எப்படி படிச்சிருப்போம்னு உங்களால புரிஞ்சுக்க முடியுமே.. நாங்க சராசரி மாணவர்கள்தான். நாங்க ஒரு எக்ஸாம் எழுதினப்போ பாஸ் மார்க் 35 தான் .நான் 15 மார்க் எடுத்தேன். சந்தானம் 14 மார்க் எடுத்தார். என்னடா எனக்குத்தெரியாம படிச்சே ?என்னைவிட ஒரு மார்க் அதிகமா எடுத்திருக்கே ?எனக்குத் தெரியாமல் டியூஷன் போறியான்னார். அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்துங்க நாங்க. எப்படியோ முட்டி மோதி நாங்க இன்ஜினியரிங்கும் முடிச்சிட்டோம். பாருங்க." என்று கலகலத்தார் முருகன்.