சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவர் பதவிக்கு, நடிகர் நாசர் போட்டியிட வாய்ப்பு இருப்பதால், அவரை அச்சுறுத்தும் வகையில், தொலைபேசி மூலம் மர்ம நபர்கள், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சமீபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாடக நடிகர்களை, நடிகர்கள் விஷால், கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, நடிகர் சங்க தேர்தலுக்கு ஆதரவு திரட்டினர்.
பதிலடி:அப்போது, அவர்கள் மத்தியில் பேசிய விஷால், நடிகர் சங்க கட்டடம் கட்டும் விவகாரத்தில், நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குறை கூறினார். அதற்கு, நடிகர் சங்கத் தலைவர்
சரத்குமார், விஷாலுக்கு பதிலடி கொடுத்தார். விஷால் அணியில் தீவிரமாக செயல்படுபவர், நாசர். நடிகர் சங்கத்தின் தலைவர் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சரத்குமாருக்கு, நாசர் கடிதம் ஒன்று எழுதினார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது:ஒரு உறுப்பினர், சங்க நிர்வாகிகளின் கருத்துக்கு மாறுபட்டு செயல்பட்டால், அவரிடம் விளக்கம் கேட்டு விசாரித்து, நடவடிக்கை எடுப்பது தான் முறை. நடிகர் சங்க கட்டட வழக்கு, தை மாதத்துக்குள் முடிவுக்கு வரும். அப்படி இல்லையெனில், போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, எல்லாரையும் கலந்தாலோசித்து, நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் துவங்கப்படும் என, அறிவித்தீர்கள். தை கடந்து வைகாசியும் முடியப் போகிறது. குழம்பி கிடக்கும், இக்கட்டடப் பிரச்னை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு, கடித்தில் குறிப்பிட்டிருந்தார்.
நாசர், கடிதத்தில் துணிச்சலாக சில கேள்வியை எழுப்பியதால், நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிட்டால், அவருக்கு முழு ஆதரவு அளிப்போம் என, பெரிய நடிகர்கள் முதல் ஜூனியர் நடிகர்கள் வரை ஆதரவு தெரிவித்துள்ளனர்.
துண்டு பிரசுரம்:இந்நிலையில், விஷால் அணியைச் சேர்ந்த சில நடிகர்களை பற்றி, மொட்டை துண்டு பிரசுரம் அச்சடிக்கப்பட்டு, அனைத்து நடிகர், நடிகையருக்கும், மர்ம நபர்கள் அனுப்பி
வைத்துள்ளனர். இந்த மொட்டை துண்டு பிரசுரத்தில் உள்ள வாசகங்கள், விஷால் அணி நடிகர்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இதற்கிடையில், நடிகர் நாசருக்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள், ஆபாசமாக திட்டியுள்ளனர். தனக்கு நேர்ந்த அவமானத்தை, தன் சக நடிகர்களிடம் தெரிவித்து, நாசர் மிகவும் வேதனைப்பட்டுள்ளார். மிரட்டல் தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்க, விஷால் அணியைச் சேர்ந்த நடிகர்கள் திட்டமிட்டு உள்ளனர்.