ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காமெடி கலந்த பல படங்களில் நாயகனாக நடித்தவர் பாண்டியராஜன். அவரை அஞ்சாதே படத்தில் வில்லனாக்கினார் மிஷ்கின். ஆனால் அதுபற்றி அவர் பாண்டியராஜனை அழைத்து பேசியபோது, அவர் கெக்கபிக்க என்று சிரித்து விட்டாராம். வில்லனுக்கென்று ஒரு மூஞ்சி இருக்கு. அதை விட்டுட்டு என்னைப்போய் வில்லனாக நடிக்க வைக்கப்போறதா சொல்றீங்களே? உணமையாவா? இல்லை கிண்டல் பண்றீங்களா? என்று அவரைக்கேட்டாராம் பாண்டியராஜன். அதற்கு, சத்யமா சொல்றேன். என்னோட அஞ்சாதே படத்தில் வில்லன் நீங்கதான் என்றாராம் மிஷ்கின். அவரது பேச்சில் இருந்த உறுதியைப்பார்த்த பாண்டியராஜன். அது சாத்தியப்படுமா? ரசிகர்கள் சிரிக்க மாட்டார்களா? என்றாராம். சிரிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு உங்களை சீரியஸ் வில்லனாக்கிக்காட்டுகிறேன் என்று சொன்ன மிஷ்கின். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் மீசையை எடுக்க வேண்டும் என்றாராம்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாண்டியராஜன், நம்மகிட்ட வளர்றதே அது ஒண்ணுதான். அதையும் எடுத்துட்டா எப்படி? என்று கேட்டதற்கு, அதை எடுத்துட்டா நீங்களும் வில்லன்தான் என்று சொல்ல அப்படியே செய்தாராம் பாண்டியராஜன். விளைவு மிஷ்கின் சொன்னதுபோலவே வில்லன் தோரணையில் இருந்தாராம் பாண்டியராஜன். ஆக அந்த படத்தில் முதன்முறையாக வில்லனாக நடித்து மிரட்டினார்.
ஆனால் அதையடுத்து அவரை யாருமே வில்லனாக பார்க்காத நிலையில், தற்போது சாலையோரம் என்ற படத்தில் மீண்டும் பாண்டியராஜனை வில்லனாக்கியிருக்கிறார்கள். ஏற்கனவே மிஷ்கின் படத்தில் வில்லனாக நடித்ததை விட இந்த படத்தில் இன்னொரு பரிமாணத்தில் தனது வில்லன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம் பாண்டியராஜன்.