14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
ராட்டினம் படத்தை இயக்கியவர் கே.எஸ்.தங்கசாமி. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா தம்பி சத்யாவை வைத்து எட்டுத்திக்கும் மதயானை என்ற படத்தை இயக்கினார். அதோடு அந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக அவரே நடித்திருந்தார்.
மேலும், மதயானைக்கூட்டம் என்ற பெயரில் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரித்த படமும் அந்த சமயத்தில் தயாராகி வந்தால், அந்த படம் வெளியாகும் நேரத்தில் தனது படத்தையும் வெளியிட்டால் இரண்டு படங்களின் டைட்டீலும் ஒரே மாதிரியாக இருப்பதால், ரசிகர்கள் குழம்பிப்போவார்கள் என்று சில மாத இடைவெளிக்குப்பிறகு தனது எட்டுத்திக்கும் மதயானை படத்தை வெளியிட்டார்.
ஆனால் முதல் படம் போன்று இரண்டாவது படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதோடு, படம் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகாததால் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அந்த படத்தை வெளியிட்டார் தங்கசாமி. இந்த நிலையில், மீண்டும் ராட்டினம் படத்தைப்போன்று புதுமுகங்களை வைத்து தனது அடுத்த படத்தை தொடங்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் அவர். இந்த படத்தில் 4 இளைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.