ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கஞ்சா கருப்பு கதையின் நாயகனாக நடித்த படம் வேல்முருகன் போர்வெல்ஸ். இந்த படத்தில் அங்காடித்தெரு மகேஷ்-ஆருஷி, ரகசியா உள்பட பலர் நடித்திருந்தனர். மலையன் கோபி இப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் படம் விற்பனையாகவில்லை. அதன்பிறகு அவர்களே படத்தை ரிலீஸ் செய்தனர். படம் ஓரிரு நாட்கள்கூட ஓடவில்லை. இதனால் படத்தை தயாரித்த கஞ்சா கருப்பு, மலையன் கோபி இருவருமே நஷ்டமடைந்தனர். இருப்பினும், அந்த படத்துக்காக தான் நிலத்தை அடமானம் வைத்துக்கொடுத்த 30 லட்சத்தை டைரக்டர் கோபியிடம் கேட்டார் கஞ்சா கருப்பு. அவரோ, இப்போதைக்கு முடியாது என்று கூறி வந்திருக்கிறார்.
இதையடுத்து, சென்னையில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் மலையன் கோபி மீது புகார் அளித்தார் கஞ்சா கருப்பு. பின்னர், இந்த விசயம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்றது. அவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, வேல்முருகன் போர்வெல்ஸ் படத்துக்காக மலையன் கோபி 60 லட்சமும், கஞ்சாகருப்பு 30 லட்சம் செலவு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆக, அந்த படத்தினால் இரண்டு பேருக்குமே நஷ்டம் ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இருப்பினும், கஞ்சா கருப்புவிடம் படம் முடிந்ததும் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கோபி சொன்னதை மனதில் கொண்டு அடுத்தபடியாக அவர் படம் இயக்கி அந்த தொகையை தருவார் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளதாம்.
இதற்கு இரண்டுபேருமே ஒத்துக்கொண்டதை அடுத்து சில மாதங்களாக கஞ்சாகருப்பு-மலையன் கோபிக்கிடையே நடந்து வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.