ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கார்த்தி, நாகார்ஜுனா இணைந்து நடிக்க, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஸ்ருதிஹாசன்தான். கடைசிநேரத்தில் அவர் ஜகா வாங்கிவிட, அவருக்கு பதில் தமன்னா நடித்து வருகிறார். 'பிவிபி சினிமா' நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை வம்சி இயக்குகிறார். இவர் தெலுங்கில் 'பிருந்தாவனம்', 'யவடு' உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் திடீரென ஸ்ருதிஹாசன் இப்படத்திலிருந்து விலகியதால் படப்பிடிப்பு தேதிகளில் குழப்பம் நிலவியது. பிறகு அனைத்தும் சரி செய்யப்பட்டநிலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஒரு சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து ஒரு சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டனர் படப்பிடிப்பு குழுவினர்! இப்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. இந்த ஷெட்யூலில் கார்த்தி கலந்து கொள்கிறார். சுமார் 30 நாட்கள் தொடர்ச்சியாய் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.