ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நெருங்கும் நேரத்தில் அங்கு பிரச்னைகள் பூதாகரமாக வெடித்து வருகிறது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோரை நடிகர் விஷால் கடுமையாக விமர்சித்து வருவதோடு. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். விஷால் தனது அவதூறு பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும், சங்கத்தின் ஒற்றுமையை கெடுக்க கூடாது என்று சரத்குமார் அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் நடிகர் நாசர், விஷாலுக்கு ஆதரவாகவும், சரத்குமாரை விமர்சித்தும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு உறுப்பினர் (விஷால்) சங்க நிர்வாகிகளின் கருத்துக்கு மாறுபட்டு செயல்பட்டால் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர் அளிக்கும் பதில் திருப்தியாக இல்லாவிட்டால் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுதான் சங்கத்தின் விதிமுறை. அதை விட்டுவிட்டு பத்திரிகைகளுக்கு அறிக்கையாக கொடுப்பது சரியான அணுகுமுறை இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த செயற்குழுவில் பூச்சி முருகன் தொடர்ந்த வழக்கு தை மாதத்திற்குள் முடிவுக்கு வராவிட்டால் ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அதன் பிறகு எல்லோரையும் கலந்து ஆலோசித்து கட்டிடம் கட்டுவது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தீர்கள். சொன்ன கெடு முடிந்து பல மாதம் ஆகியும் இன்னும் அதனை செயல்படுத்தவில்லையே ஏன்?
சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது தொடர்பான ஒப்பந்தம். அது தொடர்பான பிரச்னைகளை இன்னும் மழுப்பி வருகிறீர்கள். அது பற்றிய ஒரு தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டியதுதானே. சங்க கட்டிடத்தின் ஆயுட்கால பாதுகாவலர்களாக உங்களையும், செயலாளரையும் நீங்களே நியமித்துக் கொண்டிருக்கிறீர்களே. இது யார் எடுத்த முடிவு. இது எப்படி செல்லுபடியாகும்.
திரையுலக பிரச்னைளில் தீவிரமாக செயல்பட்டு தீர்வு காண உதவும் நடிகர் சங்கம், தனது பிரச்னையில் மட்டும் தீர்வு காணாமல் ஒதுங்குவது ஏன். மற்ற பிரச்னைகளில் தீவிரம் காட்டுவது போல், நமது சங்க பிரச்னையிலும் தீவிரம் காட்டி முடிவு காண வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு நாசர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.