ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அஞ்சான் படத்தில் சமந்தா நடிப்பதற்கு முன்பு வரை சித்தார்த்-சமந்தா காதல் கல்யாண கதைகள் மீடியாக்களில் சூடு பறக்க வெளியாகிக்கொண்டிருந்தன. ஆனால், அந்த படத்தில் சமந்தா சூடு காட்டி நடித்ததை அடுத்து அதை தாங்கிக்கொள்ள முடியாமல் காதலையே முறித்துக்கொண்டார் சித்தார்த். அதற்கு முன்பு வரை அவர்களின் காதல் பற்றி மீடியாக்கள் கேள்வி கேட்டால், அடுத்தவங்க வீட்டு ஜன்னலை உங்களால் எட்டிப்பார்க்காம இருக்கவே முடியாதா? என்று கேட்டவர், பின்னர் அந்த விசயம் கதம் கதம் என்று சொல்லிவிட்டு அடுத்த கேள்விக்கு தாவினார். ஆக, அதுவரை கட்டுப்பாட்டுக்குள் சிக்கி சிதைந்து கொண்டிருந்த சமந்தா, பின்னர் கத்தி, பத்து எண்றதுக்குள்ள என்று சுதந்திரமாக சிறகடித்தவர், இப்போது மீண்டும் விஜய்யுடன் நடிப்பதோடு, தனுசுடன் 2 படங்கள், சூர்யாவுடன் ஒரு படம் என்று செம பிசியாகி விட்டார். இதனால் அடுத்த ஆண்டு சமந்தாவின் ஆண்டாகி விடும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.
அதனால், தீயா வேலை செய்யனும் குமாரு படத்தை அடுத்து சித்தார்த்தை வைத்து அரண்மனை-2 படத்தை இயக்கும் சுந்தர்.சி அப்படத்திற்கு த்ரிஷா, ஹன்சிகா போன்ற நடிகைகளை புக் பண்ணியபோதும், தற்போது சமந்தாவிடமும் பேசியிருக்கிறாராம்.
ஆனால், இந்த சேதி சித்தார்த்துக்கு எட்டியபோது காண்டாகி விட்டாராம். ஆனபோதும் தனது மார்க்கெட் நிலையை கருதி அடங்கி விட்டாராம். ஆனால் சமந்தா அப்படத்தில் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை என்பது சித்தார்த்துக்கு ஆறுதல் செய்தி.