ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் பாசிட்டிவ், நெகட்டிவ் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்திருப்பவர் ராதாரவி. அதோடு நிறைய நாடகங்களிலும் நடித்திருக்கிறார். அந்தவகையில், தனக்கென ஒரு தனி இடத்தை இப்போதுவரை அவர் தக்க வைத்துக்கொண்டு வருகிறார். ஆனபோதும் சமீபகாலமாக அவருக்கான படவாய்ப்புகள் குறைந்து வருகிறது. சமீபகாலமாக, சூர்யா நடித்த சிங்கம், சிங்கம்-2, விஜய்யின் சுறா, மற்றும் தெனாலிராமன், சூதுகவ்வும், லிங்கா, ராமானுஜம், பிசாசு, சண்டமாருதம் என தற்போது செலக்டீவான படங்களாக நடித்துள்ள ராதாரவிக்கு கே.பாக்யராஜ் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாம். ஏற்கனவே அவர் மூன்று படங்களில் நடிக்க அழைத்தபோது இவரால் செல்ல முடியவிலலையாம். இருப்பினும், ஒரு சிறந்த இயக்குனரான பாக்யராஜின் இயக்கத்தில் எப்படியேனும் நடித்து விட வேண்டும் என்று ஆசைப்படும் ராதாரவி, தற்போது அவரிடத்தில் தனது விருப்பத்தை தெரிவித்தபோது, விரைவில் ஒரு படம் இயக்குவேன். அப்போது அழைக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம் பாக்யராஜ். இந்த தகவலை தெரிவிக்கும் ராதாரவி, சினிமாவில் எனக்கு தொடர்ந்து நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதற்காக ஒரு சீன், ரெண்டு சீனில் எல்லாம் நடிக்க மாட்டேன். எனக்கு அழுத்தமான வேடம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் சொல்கிறார்.