திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? |
தேவதை, கண்ணாத்தாள், பாட்டாளி, தொடரும், சிகாமணி ரமாமணி, காலாட்படை, வல்லமை தாராயோ, மெளனம் பேசியதே உள்பட ஏராளமான படங்களுக்கு பாடல் எழுதியிருப்பவர் கவிஞர் காமகோடியன். தற்போதும் இளட்ட பாடலாசிரியர்களுக்கு மத்தியில் தானும் அவ்வப்போது பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார் அவர். இந்தநிலையில், விரைவில் வெளிவரயிருக்கும் திருட்டு ரயில் என்ற படத்தில் மொத்த பாடல்களையும் காமகோடியனே எழுதியிருக்கிறார். அதுவும் பழைய பாணியிலேயே இந்த படத்திற்கு கம்போசிங் செய்து பாடல்கள் எழுதியிருக்கிறாராம்.
இதுபற்றி காமகோடியன் கூறுகையில், நான் சினிமாவில் பாடல்கள் எழுத வந்த காலகட்டத்தில் பாடல்கள் எழுதுவதற்கு இசையமைப்பாளர்கள் கம்போசிங் செய்யும் இடத்துக்கே அழைப்பார்கள். அவர்கள் டியூன் போட போட நாங்கள் பாட்டு எழுதிக்கொடுப்போம். ஆனால், இப்போதைய சினிமாவில் கம்போசிங் என்பதே இல்லை. இசையமைப்பாளர், இயக்குனர்கள் யார் என்பதே தெரியவில்லை. ஒரு டியூன் கேசட்டை கொடுத்து இந்த சூழலுக்கு பாடல் எழுதிக்கொடுங்கள் என்று கேட்கிறார்கள். எழுதி கொடுத்த பிறகு பாடல் ரெக்கார்டிங் நடக்கும்போதுகூட பாடலாசிரியர்களை அழைப்பதில்லை.
இப்படி மாறிவிட்ட காலத்திலும் இந்த திருட்டு ரயில் படத்துக்கு இசையமைப்பாளர் ஜெய்பிரகாஷ் அனைவர் முன்னிலையிலும் கம்போசிங் நடத்தினார். அப்போதுதான் என்னை அழைத்து பாடல் எழுத வைத்தார். அதனால்தான் இந்த படத்துக்கு நான் எனது ஆரம்ப காலத்தைப்போலவே மிகவும் ரசித்து பாட்டெழுதிக்கொடுத்தேன் என்று கூறும் காமகோடியன், இந்த சினிமாவில் நான் மூன்று தலைமுறை கவிஞன். ஆனபோதும், இப்போதும் எனது மனநிலை இளமையாகவே உள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தமான வார்த்தைகளைக்கொண்டு என்னாலும் பாடல் எழுத முடியும் என்கிறார்.