ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான சீனிவாசனின் மகன் என்கிற அடைமொழியுடன் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வினீத் சீனிவாசன். இன்று வினீத் சீனிவாசனின் தந்தை என அழைக்கப்படும் அளவுக்கு தனது தந்தையை விட மோஸ்ட் வான்ட்டேட் நபராக இருக்கிறார். இவர் இயக்கிய முதல் படமான 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' தான், நிவின் பாலி அறிமுகமான முதல் படம். இரண்டாவது படமான 'தட்டத்தின் மறயத்து' படத்திலும் இவர்கள் கூட்டணி தொடர்ந்தது. படமும் ஹிட்.. இரண்டு தேசிய விருதுகள் கூட கிடைத்தன.
கடந்த மார்ச்சில் மலையாளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய 'ஒரு வடக்கன் செல்பி' படத்திற்கு கதையையும் எழுதிகொடுத்து, நிவின் பாலிக்காக கூடவே முக்கியமான கேரக்டரிலும் நடித்தார் வினீத் சீனிவாசன். இந்தப்படம் சென்னையில் ஐம்பது நாட்களை தாண்டி இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் இப்போது பல இளைஞர்கள் தங்களது கதைகளை எழுதி வினீத் சீனிவாசனுக்கு அனுப்பி வருகின்றனர்.
ஆனால் வினீத் சீனிவாசனோ “தயவுசெய்து எனக்கு யாரும் பேஸ்புக், வாட்ஸ் அப், ஈமெயில் மூலமாக உங்களது கதைகளை என்னை கேட்காமல் அனுப்பி வைக்காதீர்கள்.. உங்களது கதைகளை தயவுசெய்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். நான் என் கதைகளை மக்கள், சமூகம், படிக்கும் புத்தகங்கள், பயணம் மற்றும் எனது சொந்த அனுபவங்களில் நான் பார்க்கும் விஷயங்களில் இருந்துதான் தேர்ந்தெடுக்கிறேன். ஆகவே உங்களது கதைகளை எனக்கு அனுப்ப வேண்டாம். அதை பாதுகாக்கும் முயற்சியில் இறங்குங்கள்” என கூறியுள்ளார்.