ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி என காதல் கதைகளாக நடித்தபோது ஓவராக பஞ்ச் டயலாக்குகளில் கவனம் செலுத்தவில்லை தனுஷ். ஆனால், திடீரென ஆக்சன் கதைகளில் நடிக்கத் தொடங்கியபோது தனது ஒல்லிகுச்சி உடம்பை வைத்துக்கொண்டு பத்து பதினைந்து ரவுடிகளையெல்லாம் புரட்டி எடுத்தார்.
அதோடு, பார்க்கத்தான் நான் சுள்ளான், சூடான்னா சுளுக்கு எடுத்துடுவேன், நாங்களெல்லாம் சுனாமியிலேயே சும்மிங் போறவங்க -என்று சில படங்களில் பஞ்ச் டயலாக்குகளை பேசி நடித்தார். அப்படி தனுஷ் பேசிய டயலாக்குகள் இளவட்டங்கள் மத்தியிலும் பெருசாக ரீச் ஆனது.
ஆனால், சமீபகாலமாக அவருக்கு பஞ்ச் டயலாக்குகளில் பெரிதாக ஈடுபாடு இல்லையாம். காரணம், தற்போது மெச்சூரிட்டியான கதைகளாக நடிக்க ஆசைப்படும் தனுஷ், அந்த கதைகளுக்கேற்ற டயலாக்குகளை மட்டுமே பேசி நடிக்க விரும்புகிறாராம். தேவையில்லாத பில்டப் கொடுக்கும் பஞ்ச் டயலாக்குகளை தவிர்க்கிறாராம்.
அந்த வகையில், யாராவது இயக்குனர்கள் சும்மா இருந்து விட்டுப் போகட்டும் என்று சந்தடி சாக்கில் பஞ்ச் டயலாக்குகளை திணித்தால்கூட தான் நடிக்கும் போது அவற்றை கத்தரித்து விட்டே நடிக்கிறாராம் தனுஷ். ஒரு காலத்தில் பஞ்ச் டயலாக் கேட்டு வாங்கிய தனுஷின் இந்த மாற்றம் இயக்குனர்களை ஆச்சர்யப் படுத்தியுள்ளது.