ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
முதன்முதலாய், சிறுவாணி உள்பட சில படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா. பெங்காலி நடிகையான இவர், தமிழில் ஒரு பெரிய இடத்தை பிடித்து விட வேண்டும் என்று தான் நடித்த படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வந்தார். ஆனபோதும் அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் ஐஸ்வர்யாவின் நடிப்பு பேசப்படவில்லை.
இந்த நிலையில், கடைசியாக நடித்த சிறுவாணி படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் அவர். சமீபத்தில் அப்படம் வெளியானபோது படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை வந்திருந்த ஐஸ்வர்யா, அந்த படத்தை பார்க்க வந்திருந்த சில கோடம்பாக்க டைரக்டர்களிடம் தனக்கு சான்ஸ் தருமாறு ஆதரவு திரட்டியிருக்கிறார்.
ஆனபோதும், அவர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லையாம். அதனால் படம் வெளியாகி சில நாட்கள் வரை சென்னையில் இருந்த ஐஸ்வர்யா, தற்போது தமிழ் சினிமா மீதான நம்பிக்கையை இழந்து விட்டவர், தனது தாய்மொழியான பெங்காலியில் ஒரு படத்தில் கமிட்டாகி தற்போது நடித்துக்கொண்டிருக்கிறாராம். இனிமேல் தமிழில் இருந்து வாய்ப்புகள் தேடிச்சென்றால் மட்டுமே கோலிவுட்டுக்கு வருவாராம். இல்லையேல் முழுநேர பெங்காலி நடிகையாகி விடுவாராம் ஐஸ்வர்யா.