ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து '36 வயதினிலே' படம் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார் ஜோதிகா. இப்படத்தை ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யாவே தனது முதல்பட தயாரிப்பாக இப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த 15ம் தேதி வெளியான இந்தப் படம் தயாரிப்பு நிறுவனத்தாலேயே வெற்றி பெற்ற படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா...
36 வயதினிலே படத்தை இவ்வளவு தூரம் கொண்டு போன எல்லோருக்கும் நன்றி. எங்களது இந்த பயணம் ஆசீர்வதிக்கப்பட்ட பயணம். வணிக ரீதியான பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கணும், பெண்களை மையப்படுத்தி ஒரு படம் எடுக்கணும் என்று முடிவு செய்தோம். பெண்களை மையப்படுத்தி படங்கள் வந்து வெகுகாலமாகிவிட்டது. அதனால் இந்தப்படத்தை எடுத்தோம்.
பிளஸ் 2 பெண்ணாக மாறிய ஜோ
எங்களது குழந்தைகளான தியா மற்றும் தேவ்வின் முதல் எழுத்தை கொண்டு 2டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தோம். முதல்படமே அம்மா படமாக இருக்கட்டும் என்று நினைத்து தான் இதை ஆரம்பித்தோம். 40 நாட்களில் படத்தை முடித்தோம். ஒரு ப்ளஸ் 2 படிக்கும் பெண் போன்று படத்தின் டயலாக்குகளை ஜோதிகா இரவு முழுக்க படிப்பார். அவ்வப்போது சில டயலாக்குகளை நான் சொல்லி கொடுப்பேன். இப்போது படத்தில் எந்த டயலாக்கை கேட்டாலும் அவர் அப்படியே மனப்பாடமாக சொல்வார்.
சிவப்பு கம்பளம் வரவேற்பு
36 வயதினிலே படத்திற்கு சிவப்பு கம்பளம் கொடுத்து மரியாதையான ஒரு வெற்றியை கொடுத்துள்ளார்கள் ரசிகர்கள். இதை உங்களிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதமாக எடுத்து கொள்கிறோம். 8 வருடத்திற்கு பிறகு ஜோவை, திரையில் பார்த்தபோது அதே சந்தோஷம், அதே புத்துணர்ச்சி இருந்தது. ஒரு பவர்புல் வெற்றியை ரசிகர்கள் கொடுத்துள்ளார்கள். கேரளாவில் எப்படி ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை ரசிகர்கள் வெற்றி பெற வைத்தார்களோ, அதேப்போன்று தமிழிலும் அதன் ரீ-மேக்கான 36 வயதினிலே படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இதற்காக இயக்குநர், அவருடன் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தியேட்டரில் மீண்டும் மல்லிகைப்பூ வாசம்
வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் விதமாக, பெண்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சியை கொடுக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு இ-மெயில் மற்றும் போனில் நிறைய பாராட்டுகள் வருகிறது. அதுமட்டுமின்றி தியேட்டரில் நீண்ட நாட்களுக்கு பிறகு மல்லிகை பூ வாசம் வருகிறது என்று பலர் சொன்னார்கள். அந்தளவுக்கு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் 2டி நிறுவனம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.
நான் வைத்த தலைப்பு
படத்திற்கு 36 வயதினிலே என நான் தான் டைட்டில் வைத்தேன். நிறையபேர் இந்த டைட்டில் சரியாக இல்லை, அம்மா... உள்ளிட்ட பல டைட்டில்களை சொன்னார்கள், ஆனால் நான் பிடிவாதமாக இந்த டைட்டிலை வைத்தேன். 16 வயதில் ஒரு பெண் அழகாக இருப்பதை சொல்கிறோம், அதேப்போன்று 36 வயதில் ஒரு பெண்ணின் வாழ்க்கை அழகை சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு, 36 வயதினிலே என தலைப்பு வைத்தேன்.
சம்பளம் வாங்காத ஜோ
36 வயதினிலே படத்திற்காக ஜோ, இதுவரை ஒரு பைசா கூட சம்பளம் பெறவில்லை. ஆனால் இப்போது சொல்கிறேன். இன்றைக்கு டாப் ஹீரோயின்கள் என்ன சம்பளம் வாங்குகிறார்களோ...? அந்த சம்பளத்தை நான் அவருக்கு கொடுக்க போகிறேன்.
ஜோவை பாராட்டிய சிவக்குமார்
ஜோவின் நடிப்பை பார்த்து விட்டு அப்பா வெகுவாக பாராட்டினார். என்னிடம் வந்து, ''தவறாக எடுத்து கொள்ளாதே... உன்னை விட ஜோதிகா மிகவும் அருமையாக நடிக்கிறார், ஹேட்ஸ் ஆப் ஜோ...'' என்று சொன்னார். நானும் உண்மை தான் என்று சொன்னேன். எல்லோரும் கொடுத்த ஒட்டுமொத்த வெற்றி எங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
இவ்வாறு சூர்யா பேசினார்.
25 பெண்களுக்கு நலத்திட்ட உதவி
இந்த நிகழ்ச்சியின் போது, வாழ்க்கையில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஏழ்மையில் நிலையில் வாடிய பெண்கள்... என 25 பேரை தேடி பிடித்து அவர்களுக்கு சக்தி மசாலா மற்றும் அகரம் பவுண்டேஷன் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இன்னும் இதுபோன்று பல பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க போவதாக நிகழ்ச்சியின் போது சூர்யா தெரிவித்தார்.