ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியர் சூர்யாவும், ஜோதிகாவும். ''பூவெல்லாம் கேட்டுப்பார்'' படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாக மாறி, திருமணத்தில் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட ஜோதிகா, எட்டு ஆண்டு இடைவௌிக்கு பிறகு தற்போது 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியாகி உள்ளார். மலையாளத்தில் வெற்றி பெற்ற ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் ரீ-மேக்காக கடந்த மே 15ம் தேதி வௌியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜோதிகாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். படமும் நல்ல வசூலை பெற்று இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஜோதிகா பேசியதாவது, ஒரு பெண்ணுக்கு வீடு, கார் எல்லாம் முக்கியம் கிடையாது. குழந்தைகளுடன் அன்பாக பழகி, அவர்களுடன் கொஞ்சம் நேரத்தை செலவழிக்க வேண்டும். அதேப்போல் மனைவியின் தேவையை என்ன என்பதை கணவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். குறைந்தது 30 நிமிடமாவது அவர்களுடன் அன்பாக பேசி, அவர்களுக்கான தேவையை செய்ய வேண்டும். மனதுக்கு திருப்தியான ரோல் கிடைத்தால் கண்டிப்பாக தொடர்ந்து நடிப்பேன் என்றார்.