ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு எதிராக, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற ரேஞ்சில் அவ்வப்போது பலர் காட்டமான விமர்சனங்களை கூறிவருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மோகன்லால் இப்படிப்பட்ட விமர்சனத்தில் சிக்கினார். அதாவது பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு தற்போது மம்முட்டியை விஷ வார்த்தைகளால் தாக்கி பேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார் சாமியார் என சொல்லிக்கொள்ளும் ராஜா குருசாமி ஹிமாவல் மகேஷ்வர பத்ரானந்த் என்பவர். பெயரே இவ்வளவு நீளம் என்றால் வாயும் கொஞ்ச நீளம் தான் போலும்.
மம்முட்டி மேல் அப்படி என்ன காட்டம் இவருக்கு..? விஷயம் சாதாரணமானதுதான்.. சமீபத்தில் மம்முட்டிடி ஏதோ ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் டிவி சீரியல்களைப்பற்றி தமாஷாக ஏதோ கூறியிருக்கிறார். அவ்வளவுதான் இந்த ராஜா குருசாமிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. “மலச்சிக்கல் வந்தவரைப்போல முகத்தை வைத்துக்கொண்டு நடிக்கும் மம்முட்டியைவிட, டிவி நடிகர்கள் நன்றாகவே நடிக்கிறார்கள்.. மம்முட்டி என்பவர் வெறும் கழிவுகளால் ஆன சதைப்பிண்டம்” என இன்னும் பல விஷ வார்த்தைகளால் தாக்கியுள்ளார்.