மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது 150வது படமான ஆட்டோ ஜானியில் நடிக்கிறார். தற்போது அவர் அந்த படத்திற்கு பிறகு திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். அவரது ரசிகர்களுக்கு மிகவும் இனிமையான செய்தி காத்து இருக்கின்றது. அவர் 150வது படத்திற்கு பிறகு தொடர்ந்து படத்தில் நடிக்க இருக்கிறாராம். அவர் குடும்பத்தில் இருந்து மெகா இளம் ஹீரோக்கள் இன்று டோலிவுட்டில் சிறந்து விளங்கி கொண்டு இருக்கும் போதும், சிரஞ்சீவிக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அவர் தனது ஆட்டோ ஜானிக்காக பூரி ஜெகன்நாத்தை தேர்ந்து எடுத்ததன் மூலம் அவரது ரசிகர்களுக்கு ஒரு கமர்ஷியல் ஹிட் படம் கொடுக்க வேண்டும் அவர் விரும்புவதாக தெரிகிறது.