ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரம், சமந்தா நடிப்பில், விஜய் மில்டன் இயக்கி வரும் படம் ''10 எண்றதுக்குள்ள''. பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. கிளைமாக்ஸ் மட்டுமே பாக்கி உள்ளது.
பயணத்தை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ரெயிலில் நடக்கிறது. வழக்கமான ரெயில் சண்டை காட்சியாக இல்லாமல் புதுமையான சண்டைக் காட்சியை படமாக்க இருக்கிறார் விஜய் மில்டன். அதாவது அருகருகே செல்லும் இரண்டு ரெயிலில் கிளைமாக்ஸ் எடுக்கப்படுகிறது. ஒரு ரெயிலில் தப்பி ஓடும் வில்லனை, பிடிக்க இன்னொரு ரெயிலில் விக்ரம் துரத்திச் சென்று சண்டையிடுவதாக கிளைமாக்ஸ் காட்சி வடிவமைக்கப்ட்டுள்ளது.
ஹாலிவுட் படங்களில்தான் இதுபோன்ற சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தற்போது இரண்டு டிராக்கிலும் ரெயில் ஓடும் பகுதி, இரண்டு ரெயில்கள் ஆகியவற்றுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் ஒருவாரம் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இரண்டு ரயில்களுக்கும் ஒரு நாள் வாடகை மட்டும் 25 லட்சம் ஆகுமாம்.