ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் அன்பு.ஜி இயக்க, இன்னொரு உதவியாளர் சம்பத்குமார் தயாரித்துள்ள படம் இருவர் ஒன்றானால். வருகிற 29ந் தேதி படம் வெளிவருகிறது. இந்தப் படத்தில் பிரபு என்ற புதுமுகம் ஹீரோவாகவும், கிருத்திகா மாலினி என்ற புதுமுகம் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். தன்னை தேடி வரும் பல காதலிகளை நிராகரிக்கும் பிரபு, தானே தேடிச் சென்று கிருத்திகா மாலினியை காதலிக்கிற கதை.
இவர்கள் இருவருமே நிஜ காதலர்கள் என்பதுதான் புதுமை. படத்தில் இருவரும் பல ஈகோ போராட்டத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர் நிஜ வாழ்க்கையும் அப்படித்தான். இதனால் பிரபு, கிருத்திகா மாலினியின் நிஜ திருமண காட்சிகளையே படத்தின் கிளைமாக்சாவும் வைத்து விட்டார்கள். தமிழ் சினிமாவில் இது ஒரு புதுமையாகும். பிரபு சேலத்தைச் சேர்ந்தவர், கிருத்திகா மதுரையை சேர்ந்தவர் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போது காதலித்து அந்த காதலையே சினிமாவிலும் பிரதிபலித்து விட்டு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
"படம் யதார்த்தமான காதலை சொல்வதால் நிஜ காதலர்களையே நடிக்க வைப்பது என்று முடிவு செய்து பிரபு, கிருத்திகாவை நடிக்க வைத்தோம். அவர்களின் நிஜ கதையுடன் கொஞ்சம் கற்பனையை சேர்த்து படம் எடுத்தோம். படம் முடிந்தவுடன் இருவரது திருமணமும் சேலத்தில் நடந்தது. அதை படம்பிடித்து படத்தின் கிளைமாக்சாக சேர்த்து விட்டோம். இது ஒரு உண்மை கதை என்று நாங்கள் அடித்துச் சொல்ல முடியும்" என்கிறார் இயக்குனர் அன்புஜி.