ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெண்களை மையப்படுத்திய கதையை படமாக எடுக்க மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவுக்கு ஆசை நிறையவே இருந்தது. சில வருடங்களுக்கு முன், ஏமாற்றும் காதலனை வித்தியாசமாக பழிவாங்கும் பெண்ணை மையப்படுத்தி '22 பீமேல் கோட்டயம்' படத்தை எடுத்தார். படம் பாராட்டு பெற்றாலும் ஆஷிக் அபுவின் ஆசை முழுமை அடையவில்லை.. பெண்களுக்கான கதையில் நடிக்க, அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க திறமையான நடிகைகள் ஒரு சிலர் இருந்தனர். அவர்களும் திருமணம் செய்துகொண்டுவிட்டு செட்டில் ஆகிவிட்டார்கள்.
அதனால் பெண்களுக்கான படம் இயக்கும் தனது ஆசையை கிடப்பில் போட்டிருந்த ஆஷிக் அபுவிற்கு, மஞ்சு வாரியர் மீண்டும் நடிக்க வந்ததும் தான், கொஞ்சம் தெம்பு பிறந்ததாம்.. அதற்கேற்ற மாதிரி தன் கைவசம் வைத்திருந்த 'ராணி பத்மினி' கதையை மஞ்சுவிடம் சொல்ல, அவருக்கும் அது பிடித்துப்போய் எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதித்துவிட, இப்போது ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறதாம்.
“மஞ்சு வாரியர் இல்லையென்றால் இந்தக்கதையை நான் படமாக்கியிருக்கவே மாட்டேன்.. அவர்தான் ராணி பத்மினிக்கு உயிர் கொடுத்தவர்” என்கிறார் ஆஷிக் அபு.. இதில் ராணியாக மஞ்சு வாரியரும், பத்மினியாக ரீமா கல்லிங்கலும் நடிக்கின்றனர். முன்பின் அறிமுகம் இல்லாத இரண்டு பெண்களுக்கிடையே ஏற்படும் சந்திப்பும், அதை தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தான் படத்தின் கதையாம்.