ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கெளதம்மேனன்-ஹாரிஸ்ஜெயராஜ் ஆகிய இருவருக்கும் மின்னலே படத்தில் இருந்தே நல்லதொரு கெமிஸ்ட்ரி இருந்து வந்தது. அந்த வகையில், கெளதம்மேனனின் பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களாக கொடுத்து வந்தார் ஹாரிஸ். ஆனால், ஒருகட்டத்தில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்க வைத்தார் கெளதம்மேனன்.
சிம்பு-த்ரிஷா ஜோடி சேர்ந்த அந்த படமும், ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் பெரிய அளவில் இளவட்ட ரசிகர்களை கவர்ந்தது. அந்த வகையில், கெளதம்மேனனுக்கும், சிம்புவுக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா மறக்க முடியாத படமாக அமைந்தது.
இந்த நிலையில், அஜீத்தை வைத்து தான் இயக்கிய என்னை அறிந்தால் படத்திற்கு மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜையே இசையமைக்க வைத்த கெளதம்மேனன், அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ஏ.ஆர்.ரகுமானிடம் சென்றிருக்கிறார். இப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இன்னொரு பாகம் போன்ற கதையில் உருவாவதால் அவரது இசைதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறாராம் கெளதம்.
ஆனால் இந்த படத்திற்குள் ஏ. ஆர்.ரகுமான் வந்திருப்பது சிம்புவுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறதாம். ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா மெகா ஹிட் என்பதோடு, சமீபகாலமாக தான் நடித்த படங்களே தியேட்டருக்கு வரமுடியாமல் அல்லாடிக்கொண்டு கிடக்கும் இந்த நேரத்தில் கெளதம்மேனன், ஏ.ஆர்.ரகுமான் என்ற இரண்டு நல்ல ராசிக்காரர்கள் கூட்டணியில் தானும் இருப்பதால், அவர்களது ராசி தன்னையும் கரைசேர்த்து விடும் என்ற முழு நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டுள்ளதாம்.