14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பெரும்பாலும் காமெடி காட்சிகள் என்றால் வசனங்கள், பாடிலாங்குவேஜ் மூலம்தான் நடித்து ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள் காமெடியன்கள். ஆனால் அது நான் கடவுள் ராஜேந்திரன் விசயத்தில் வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது அவர் மற்றவர்களைப் போன்று காமெடி செய்த படங்களை விட அருவா கம்பு, துப்பாக்கியை தூக்கி கொண்டு நடித்த படங்களில்தான் அவரது காமெடிக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதனால் இவரே மாற நினைத்தாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. அவரை ரவுடியாக, கூலிப்படையாக, கறிக்கடைக்காரனாக என அவரது கையில் ஏதாவது ஆயுதங்களை கொடுத்துதான் நடிக்க வைக்கிறார்கள். ஆனால் அப்படி சொல்லும் டைரக்டர்களிடம், காமெடி செய்கிறோம் எதற்காக அருவா கம்புடன் திரிய வேண்டும் என்று இவர் கேள்வி கேட்டால், அப்படி எதையாவது தூக்கினால்தான் உங்க காமெடி ஒர்க்அவுட் ஆவுது என்கிறார்களாம்.
ஆக, நாம் நினைப்பதை விட மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள். எதை ரசிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்ற முடிவுக்கு இப்போது வந்து விட்ட நான் கடவுள் ராஜேந்திரன், டைரக்டர்கள், ரசிகர்கள் விரும்பும் பாதையிலேயே தொடர்ந்து பயணிக்க முடிவு செய்துவிட்டாராம்.
அதேசமயம், அவர் பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றத்தில் இருந்தாலும் நிஜத்தில் இளகிய மனம் கொண்டவராம். யாராவது கண்கலங்குவதை பார்த்தால் தானும் கரைந்து விடுவாராம்.