ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாண்டியநாடு படத்தை அடுத்து விஷாலை நாயகனாக வைத்து சுசீந்திரன் இயக்கி வரும் படம் பாயும்புலி. முந்தைய படத்தைப்போலவே இந்த படமும் மதுரை கதைக்களத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதோடு, முந்தைய படத்தில் விஷாலுடன் நடித்த சூரியும் இந்த படத்தில் நடிக்கிறார். மற்றபடி, காஜல்அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.
முந்தைய படங்களில் முற்றிலும் மதுரை மண்வாசணை கதைகளில் அந்த மக்களின் வாழ்வியலை சொன்ன சுசீந்திரன், இந்த படத்தில் அங்குள்ள ரவுடிகளை களையெடுக்கும் கதையை கையிலெடுத்திருக்கிறார். ஏற்கனவே மதுரை ரவுடியைப்பற்றிய கதையை ஜிகர்தண்டா என்ற பெயரில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.
ஆனால் இந்த படம் அதிலிருந்து மாறுபட்ட அதிரடியான கதையில் உருவாகிறது. விஷால் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரை நகர்ப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,சமீபத்தில் ஒருநாள் மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாயும்புலி யூனிட்டுடன் சென்று விஷாலும், சுசீந்திரனும் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது அவர்களுடன் சுசீந்திரன், சூரி ஆகியோர் தங்களது மகன்களையும் அழைத்து சென்றிருந்தார்களாம்.