ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரான்சில் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்த விழாவின் ஸ்டார் அட்ராக்ஷனே முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நட்சத்திரமுமான ஐஸ்வர்யாராய்தான். இப்போது புதிதாக ஒருவர் ஸ்டார் அட்ராக்ஷனாகி இருக்கிறார். அது ஐஸ்வர்யாராய்&அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா. படவிழாவுக்கு தினமும் வந்துவிடும் ஐஸ்வர்யா மறக்காமல் தன் மகள் ஆராத்யாவையும் தூக்கிக் கொண்டு வந்து விடுகிறார். மகள் அணிந்திருக்கும் உடைக்கு நேர்மாறான வண்ணம் கொண்ட உடை அணிந்து வருகிறார். உலக புகைப்பட கலைஞர்கள். ஐஸ்வர்யாவுடன் ஆராத்யாவையும் கேமராவுக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
"நான் 14 வருடமாக தொடர்ந்து கேன்ஸ் படவிழாவுக்கு வருகிறேன். என் மகள் ஆராத்யா இதற்கு முன்பும் வந்திருக்கிறாள். அவள் 6 மாத குழந்தையாக இருந்தபோது தூக்கி வந்திருக்கிறேன். இப்போது 3 வயது குழந்தையாக அவள் வந்திருக்கிறாள். அவள் விளையாடுவதற்கு இங்கு நல்ல இடம் உள்ளது. அவளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் கடைகள் உள்ளது. அவளுக்கு இந்த இடம் மிகவும் பிடித்து விட்டது. என் மகள் எனக்கு கிடைத்தது பெரிய ஆசீர்வாதம். அவளுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் நான் அற்புதமான தருணங்களாக உணர்கிறேன்" என்கிறார் ஐஸ்வர்யாராய்.