விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கிருஷ்ணா, விதார்த், எரிக்கா பெர்னான்டஸ், தன்ஷிகா, வெங்கட் பிரபு நடிக்கும் படம் விழித்திரு. அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா.கதிரவன் இயக்குகிறார். இந்தப் படத்தில் டி.ராஜேந்தர் ஒரு குத்துப்பாடலை எழுதி அதை பாடி அதற்கு மும்பை அழகிகளுடன் ஆட்டமும் போட்டிருக்கிறார்.தனது படங்கள் தவிர மற்ற படங்களில் டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார், ஆடியிருக்கிறார். ஆனால் பாடல் எழுதியதில்லை. விழித்திரு படத்திற்காக 3 வேலைகளையும் செய்திருக்கிறார். "வாடி என் சில்சிலா, காட்டாத சல்சலா..." என்று துவங்கும் இந்த பாடலின் காட்சிகள் பின்னி மில்லில் செட் போட்டு படமாக்கப்பட்டது. பாடலுக்கு சத்யன் மகாலிங்கம் என்ற புதுமுகம் இசை அமைத்திருக்கிறார்.இந்த பாடலில் டி.ராஜேந்தருடன் மஸ்காரா புகழ் அஸ்மிதா, மும்பை மாடல் அழகி சனா சூரி, ஆடியுள்ளனர். இன்றைய இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் ஆடி தீர்த்தாராம். டி.ராஜேந்தர் கடைசியாக ஆர்யா சூர்யா என்ற படத்துக்கு குத்தாட்டம் ஆடியிருந்தார்.