ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில பண்பலை ரேடியோக்கள் மற்றும் தொலைக்காட்சிகள் இளையராஜாவின் பெயரை பயன்படுத்தி நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. இந்த நிலையில் என் அனுமதியின்றி என் பெயரில் யாரும் நிகழ்ச்சி நடத்தக்கூடாது. என் பெயரை, படத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளையராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சில ஆடியோ நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக ரசிகர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட உள்ளது. ரேடியோ மிர்சி நிறுவனம் ஒலிபரப்பி வரும் நீங்க நான் ராஜா சார் என்ற நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லி கடிதம் எழுதியிருக்கிறோம்.