வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, யா யா, திறந்திடு சீசே உள்பட சில படங்களில் நடித்தவர் தன்ஷிகா. தற்போது கிட்னா, மால், காத்தாடி என பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியிருக்கும் திறந்திடு சீசே படம் அவரை பேச வைத்திருக்கிறது. குறிப்பாக, இதுவரை அவர் நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரை ரொம்பவே அழகாக காண்பித்திருக்கிறார்கள். அதோடு, தன்ஷிகாவும் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாகவே நடித்திருந்தார். அதோடு, எந்த விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் சில காட்சிகளில் சரக்கு அடித்தபடியும் துணிச்சலாக நடித்திருந்தார். ஆனால் முன்பு அரிமா நம்பி படத்தில் ப்ரியாஆனந்த் பாரில் சரக்கு அடித்தபடி நடித்ததை பலரும் விமர்சித்து வந்த நிலையில் தன்ஷிகா சரக்கு அடித்ததை யாருமே விமர்சிக்கவில்லை. மாறாக, பப்பில் நடக்கும் கதை என்பதால் அந்த கேரக்டரில் அப்படி நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று அவர் அப்படி நடித்ததையும், அவரது நடிப்பு மிகவும் இயல்பாக இருந்ததாகவும் பலரும் பாராட்டி வருகிறார்களாம். அதனால், இனிமேல் இதுபோன்று வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் தன்ஷிகா.