ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2015ல் ஹீரோயினே இல்லாத ஒரு படமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியருக்கிறது நேற்று வெளியான 'டிமான்ட்டி காலனி'. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் மட்டுமே படத்தில் அதிக நேரம் வரும் நடிகர்களாக இருக்கிறார்கள். வில்லனாக நடித்துள்ள அன்டில் ஜாஸ்கெலினன் கூட ஒரு சில காட்சிகளில்தான் நடித்திருக்கிறார்.
படத்தில் மருந்துக்குக் கூட பெண்கள் இல்லாமல் போகக் கூடாது என்பதற்காக ஒரே ஒரு காட்சியில் மட்டும் நகைச்சுவை நடிகை மதுமிதா நடித்திருக்கிறார். மற்றபடி படத்தில் வேறு எந்தக் காட்சியிலும் சில நிமிடங்கள் இடம் பெறும்படியாக எந்த பெண்களுமே இல்லை. வில்லனின் மனைவியாக வரும் நடிகையைக் கூட ஒரு சில வினாடிகள் மட்டுமே காட்டுகிறார்கள்.
இந்தக் காலத்தில் இப்படி பெண்களும் இல்லாமல், ஹீரோயினும் இல்லாமல் ஒரு படமா என ஆச்சரியப்பட வைத்துள்ளது இந்தப் படம்.