ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
''ஸ்டூடண்ட் நம்பர்-1'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிபிராஜ். ஜோர், கோவை பிரதர்ஸ், லீ, நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார் சிபி, ஆனால் எந்தப்படமும் அவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை. இந்தசூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வௌியான நாய்கள் ஜாக்கிரதை படம் அவருக்கு ஒரு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள சினிமாவில் போராட தயாராகிவிட்டார் சிபி. தற்போது, ஜாக்சன் துரை என்ற படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ். இப்படத்தை தரணிதரன் இயக்குகிறார்.
சரித்திரம் கலந்த, திகில் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் சிபிராஜ். சிபிராஜ் உடன் கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கூடவே இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஸச்சேரியும் நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தில் ஹீரோயின் யார் என்று முடிவாகமல் இருந்த சூழலில், இப்போது பிந்து மாதவி நடிப்பது உறுதியாகியுள்ளது. தற்போது சவாலே சமாளி, கலக்குற மாப்ளே படங்களில் நடித்து முடித்துள்ள பிந்து மாதவி, அடுத்தப்படியாக ஜாக்சன் துரையில் நடிக்க இருக்கிறார்.