ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல் தன் படங்கள் தவிர மற்ற படங்களில் பாடுவது ரொம்ப அபூர்வமானது. கடைசியாக புதுப்பேட்டை படத்தில் பாடினார். தற்போது அவம் படத்தில் பாடியுள்ளார். கமலை பாட வைத்தது எப்படி என்கிறார் படத்தின் இயக்குனர் விஜய் வில்வகிரீஷ்...
ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு தவறை செய்து விடுகிறான். பிறகு தவறை உணர்ந்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறான். அவளும் மன்னித்து விடுகிறாள். ஆனாலும் அந்த குற்ற உணர்ச்சி அவனை கொல்கிறது. இந்த மனவோட்டத்தில் அவன் பாடுவதாக ஒரு பாடல். இசை அமைப்பாளர் சுந்தரமூர்த்தி இதற்கு மனதை உருக்கும் ஒரு மெட்டுப் போட்டார். மதன் கார்க்கி "காரிருளே... காரிருளே... இதயத்தை தொலைப்பதென்ன..." என்று பாடலை எழுதினார். மெட்டும், பாட்டும் சூப்பராக வந்த பிறகு இதை ஒரு நட்சத்திர பாடகர் பாடினால் நன்றாக இருக்கும் என்ற யோசனை வந்தது. எல்லோரின் ஒருமித்த கருத்தாக கமல் வந்தார்.
என்றாலும் புதுமுகங்களாகிய எங்கள் படத்தில் அவர் பாடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இசை அமைப்பாளர் சுந்தரமூர்த்தியின் அப்பா கமலுக்கு அறிமுகமானவர். அவரை அழைத்துக் கொண்டு சென்று கமலை சந்தித்தோம். மெட்டை கேட்டுவிட்டு பாடலை வாங்கிப் படித்தார் அது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. "ரிக்கார்டிங் ஏற்பாடு செய்துவிட்டு சொல்லுங்க வந்து பாடுகிறேன்" என்றார். எங்களுக்கு தலைகால் புரியவில்லை. உடனே அதற்கான ஏற்பாட்டை செய்துவிட்டு தகவல் சொன்னோம். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிமையாக வந்து பாடிக்கொடுத்துவிட்டுப் போனார். ஏதோ வந்தோம் பாடினோம் என்று இல்லாமல் அனுபவித்து பாடினார். அதை அப்படியே படம் எடுத்து யூ டியூப்பில் வெளியிட்டிருக்கிறோம். என்றார்.