காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
தெலுங்கு பவர்ஸ்டார் பவன் கல்யாண் சமீபகாலமாக நீண்ட தாடியுடன் காணப்படுவதை அனைவரும் அறிவர். குறிப்பாக அவரது ரசிகர்கள் எதற்காக நீண்ட தாடி வைத்திருக்கிறார் என்று விடை தெரியாமல் இருந்து வந்தனர். அவர் தற்போது நடித்து வரும் கப்பார் சிங் 2 படத்தில் நடித்து வருகிறார். எனவே அந்த படத்தில் வரும் வேடத்திற்காகத்தான் நீண்ட தாடி வைத்திருக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் அவர் சுவாமிஜி ஒருவரை சந்தித்து தீட்சை பெற்று இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது. இவருடைய நண்பரும், பிரபல இயக்குனருமான திரிவிக்ரம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு சுவாமிஜியை அடிக்கடி சந்திப்பது வழக்கம். எனவே இயக்குனர் திரிவிக்ரம் தான் அந்த சுவாமிஜி பற்றி கூறி இருக்காலம் என்றும் அதனால் தான் பவர் ஸ்டாரும் அந்த சுவாமிஜியை சந்தித்து தீட்சை பெற்று இருப்பார் என்றும் கூறப்படுகின்றது. பவன் கல்யாண் தான் நடித்துவரும் படத்திற்காகத்தான் நீண்ட தாடி வைத்திருக்கிறாரா.? அல்லது சுவாமிஜியிடம் தீட்சை பெற்று இருக்கிறாரா.? என்பது குறித்து கப்பார் சிங் 2 படம் வெளியாகும் போது தெரிந்து விடும்.