சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் வெற்றியை அடுத்து சில மாதங்களிலேயே சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தார் இயக்குனர் பாண்டிராஜ். முதல் ஷெட்யூல் மட்டும் மிக வேகமாக நடந்து முடிக்க அதன்பின் படத்தின் படப்பிடிப்பு தடுமாற ஆரம்பித்தது. வழக்கம் போல சிம்பு படப்பிடிப்புக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்காததால் ஒரு கட்டத்தில் அந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு 'ஹைக்கூ' படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார் பாண்டிராஜ்.
சூர்யாவின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 'ஹைக்கூ' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. முற்றிலும் 3, 4 வயது குழந்தைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் சூர்யா, அமலா பால் ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்றது. சூர்யா, அமலா பால் ஆகியோர் பங்கு பெற்ற காட்சிகளின் படப்பிடிப்பு அத்துடன் நிறைவு பெற்றது. மறுபக்கம் இப்படத்தின் டப்பிங் வேலைகளை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார் பாண்டிராஜ்.
'இது நம்ம ஆளு' படத்திற்கு முன்பாக பாண்டிராஜ் இயக்கி வரும் 'ஹைக்கூ' வெளிவந்தாலும் வெளிவரும் என்கிறார்கள். 'பசங்க' படத்திற்குப் பிறகு பாண்டிராஜுக்கு இந்தப் படம் மேலும் ஒரு தரமான பெயரை வாங்கிக் கொடுக்கும் என்கிறார்கள்.