மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கமல்ஹாசன், சுகன்யா நடிப்பில், சந்தானபாரதி இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளிவந்த 'மகாநதி' திரைப்படம் கமல்ஹாசன் நடித்த படங்களிலேயே மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படமாக அமைந்தது. அவருடைய வழக்கமான பாணியிலிருந்து விலகி ஒரு குடும்பத்துக் கதையை அனைவரும் ரசிக்கும்படியாக வெளிவந்த அந்தப் படம் நல்ல வசூலுடன் அருமையான படம் என்ற பாராட்டையும் பெற்றது.
அந்தப் படத்தைப் பற்றி 20 ஆண்டுகள் கழித்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு விஷயம் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. 'மகாநதி' என்பது ஒடிசா, சட்டீஸ்கர் மாநிலங்களில் பாயும் ஒரு நதி. அந்த நதியின் பெயரைத்தான் கமல்ஹாசன் அவருடைய படத்தின் பெயராக வைத்திருந்தார். அந்த 'மகாநதி' படத்திலும் ஆறுகள், நதிகளின் பெயருடன் தொடர்புடைய பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.
படத்தில் நாயகன் கமல்ஹாசனின் பெயர் 'கிருஷ்ணா'. நாயகி சுகன்யாவின் பெயர் 'யமுனா'. கமல்ஹாசனின் மகளின் பெயர் 'காவேரி', மகனின் பெயர் 'பரணி'. படத்தில் கமல்ஹாசனின் ஆரம்ப கால குடும்ப வாழ்க்கை காவிரி நதிக்கரையில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும் என அவர் கூவம் நதிக்கரையில்தான் முடிவெடுப்பார். தொலைந்து போன அவருடைய மகளை கங்கை நதிக்கரை நகரமான கல்கத்தாவில் கண்டுபிடிப்பார். மீண்டும் அவருடைய குடும்ப வாழ்க்கையை காவிரி நதிக்கரையில் தொடர்வார்.
இப்படி நதிகளையும் ஒரு கருப்பொருளாக கமல்ஹாசன் தன்னுடைய 'மகாநதி' படத்தில் இடம் பெறச் செய்த விஷயம் இருபது ஆண்டுகள் கழித்து இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.