ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோலிசோடாவை இயக்கியவர் விஜய்மில்டன். சினிமாவில் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ள இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு பரத்தை வைத்து அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்றொரு படத்தை முதன்முறையாக இயக்கினார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை.
அதனால் அதையடுத்து அவர் கால்சீட் கேட்டபோது முன்னணி ஹீரோக்கள் யாரும் அவருக்கு கால்சீட் தரவில்லை. அதனால் பின்னர் இளவட்ட பசங்களை வைத்து கோலி சோடாவை இயக்கி மெகா ஹிட்டாக கொடுத்தார். அந்த படம் பல முன்னணி நடிகர்களை பாதித்தது போன்று விக்ரமையும் பாதித்ததால் உடனே கால்சீட் கொடுத்தார்.
அப்படி விக்ரம்-விஜய்மில்டன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம்தான் பத்து எண்றதுக்குள்ள. இந்த படத்தில் விஜய் மில்டனுடன் ஒர்க் பண்ணியது விக்ரமுக்கு ரொம்ப பிடித்து விட்டதாம். அதனால், பத்து எண்றதுக்குள்ள படத்தை அடுத்து கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கும் அவர், அதற்கடுத்து மீண்டும் விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.