ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல்ஹாசனின் படங்களைப் பற்றி ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் சில விஷயங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ஆச்சரியப்படும் விஷயத்தில் ஒரு தகவல் அதிகமாகவே விவாதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. சில முக்கியப் பிரச்னைகளைப் பற்றி கமல்ஹாசன் படங்களில் இருந்த விஷயம்தான் அது.
'அன்பே சிவம்' படத்தில் கமல்ஹாசன் சுனாமியைப் பற்றிக் கூறியிருப்பார். அந்தப் படம் 2003ம் ஆண்டு வெளிவந்த ஒரு படம். அதன் பின் 2004ம் ஆண்டு இந்தியாவில் சுனாமியால் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அடுத்து, 'எபோலா' போன்ற வியாதியைப் பற்றி 'தசாவதாரம்' படத்தில் கூறியிருந்தார். அந்தப் படம் 2008ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின் 2014ம் ஆண்டு 'எபோலா' நோயால் ஆப்பிரிக்க நாடுகளில் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதே போல 'விஸ்வரூபம்' படத்திற்காக அமெரிக்க தூதரகத்தில் பிப்ரவரி மாதம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் கமலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின் மே மாதம் பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இப்படி உலகில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை தன்னுடைய படங்களில் முன்னமே கமல்ஹாசன் வைத்திருந்ததைப் பற்றி அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆச்சரியத்துடன் தெரிவித்திருக்கிறார்.